விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதனிடையே கோகிலாவும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த கோகிலாவும், காதலன் பரமசிவனும், பயத்தில் இதைப்பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு செல்வது வீட்டுக்கு வருவது என கோகிலா இருந்து வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக மாற கோகிலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோகிலாவை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணம் ஆகாமல் கோகிலா குழந்தை பெற்றது அவரது பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்ட பெற்றோர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெற்றோர் போலீசார் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப் …
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…