தமிழ்நாடு

வடசென்னைக்கு ரூ.4,181 கோடி பட்ஜெட்.! 219 திட்டங்கள்.! சேகர்பாபு கொடுத்த அப்டேட்.!

சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

வடசென்னை பகுதி மேம்பாட்டு நிதியாக மட்டும் சுமார் 4,181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்றும், இதனை கொண்டு வடசென்னை பகுதியில் மட்டும் சுமார் 219 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு அவற்றை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளையும் ஒன்றிணைத்து அத்தனையும் 2025க்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

வீடில்லாமல் குடிசையில் வாழும் மக்களுக்காக, மாற்று நிரந்தர குடியிருப்புகள் அமைக்க தற்போது அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களை பார்வையிட்டு வருகிறோம் என்றும், வடசென்னை பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றும், அதனால் இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று அப்பகுதி மேல்நிலை பள்ளியை மேம்படுத்த உள்ளோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு கொடுத்த பழைய குடியிருப்புகள் எங்கெல்லம் இடிந்து உள்ளதோ,  அதனை சீர் செய்தோ அல்லது புதிய இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்றும் இதற்காக அந்த துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களிடம் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

6 hours ago