செருப்பை சுமக்கும் பழக்கம் பாஜகவினருக்கு இருக்கலாம்.! எங்களுக்கில்லை.! தெலுங்கானா அமைச்சர் காட்டம்.!

குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்கு உள்ள பாஜகவினருக்கு இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ். 

பாஜகவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசியதாக பாஜகவினர் மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக 4 எம்எல்ஏக்களிடம் 400 கோடி வரையில் பேரம் பேசப்பட்டது என புகார்கள் எழுந்தது .

இது தொடர்பாக தெலுங்கானா தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமராவ் பாஜகவினர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ‘ பாஜகவினர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்று பழகியவர்கள்.’ என விமர்சித்து இருந்தார்.

மேலும் குறிப்பிடுகையில், ‘ மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செருப்பை சுமந்த பண்டி சஞ்சய் தற்போது லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சென்று அதே கையில் சத்தியம் செய்துள்ளார். ‘ என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, ‘ குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்கு உள்ள பாஜகவினருக்கு இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை.’ என தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment