தோல்பட்டை வலியோடு வந்தவருக்கு மெடிக்கல் உரிமையாளர் செலுத்திய ஊசி!மயக்கம் அடைந்த நிலையில் உயிரிழந்த நபர்!

சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை அடுத்த மாதக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார் ஆவார்.இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் நேற்று மாலை தோள்பட்டை வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த மெடிக்கல் கடை உரிமையாளர் பாஸ்கரனிடம் ரொம்ப தோள்பட்டை வலிக்கிறது என்று கூறியுள்ளார்.அதை கேட்ட மெடிக்கல் உரிமையாளர் அவருக்கு ஒரு ஊசியை பரிந்துரை செய்துள்ளார்.

அந்த ஊசியை போட்டவுடனே குமார் மயக்கமடைந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மெடிக்கல் உரிமையாளர் உடனே மருத்துவமனையில் குமாரை சேர்த்துள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதன் காணமாக குமார் மனைவி மீனா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர் கூறுகையில் மக்கள் பொதுவாக தங்களுக்கு உடல்நலம் சரியில்லை எனில் மருத்துவமனைக்கு செல்வதில்லை,அருகில் உள்ள மெடிக்களிலேயே மருந்து வாங்கி உட்கொள்கின்றன.

மெடிக்களில் பணிபுரிபவர்கள் நிறைய பேர் 10-ம் 12-ம் வகுப்பு முடித்தவர்களாகவே உள்ளனர்.அதனால் அவர்களுக்கு எந்த நோய்க்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை.

அதனால் மக்கள் முடிந்தவரை மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதே சரியானது என்று கூறியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க உதவும் உணவுகள் இதோ.!

Pregnancy food- கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கர்ப்பிணிகள்  முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக…

3 mins ago

நத்திங் கீழ் CMF வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலையில் எப்போது அறிமுகம்?

CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம்…

8 mins ago

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி…

19 mins ago

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் கடைசியாக பயணித்த வீடியோ காட்சி…

சென்னை: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் -…

29 mins ago

தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…

1 hour ago

அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.…

1 hour ago