மாயத்தேவர் மரணம் – சசிகலா இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 

1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர்.

இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சசிகலா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், கழக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.K. மாயத்தேவர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியபின் முதன் முதலாக கழகத்தின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புரட்சித்தலைவருக்கு பெருமை சேர்த்தவர்.

திரு.K.மாயத்தேவர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான கழக தொண்டர்களின் சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

26 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

30 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

48 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

51 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

51 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago