லெப்டினன்ட் ஜெனரல் அனில் பட், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் கவர்னர்கள் குழுவின் தலைவராக நியமனம்.!

இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவச் செயலர், லெப்டினன்ட் ஜெனரல் அனில் பட் ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் கவர்னர்கள் குழுவின் (BoG) தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் சீனாவுடனான டோக்லாம் முயற்சியின் போது இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநராக இருந்தார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட சினார் கார்ப்ஸுக்கு கட்டளையிட்டார்.

தற்போது இந்திய விண்வெளி சங்கத்தின் இயக்குநர் ஜெனரலாக, விண்வெளி தொடர்பான தொழில் மற்றும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கிறார்.