கோடநாடு வழக்கு – சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை தொடங்கியது!

கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா பதில்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று சுமார் 6 மணிநேரம் விசாரித்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இன்றும் சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், அவரிடம் நேற்று நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், கோடநாடு பங்களாவில் எவ்வளவு நகை, பணம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், 100கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Recent Posts

IPL2024: மீண்டும் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024:  மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

5 mins ago

JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் BS டிகிரி படிக்க இலவசம்.! என்ன தகுதி?

IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அதற்கு ஐஐடி…

6 hours ago

5 நாட்களில் 54 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ்.! சுற்றுலா பயணிகளால் நிரம்பும் கொடைக்கானல்.!

Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல்…

6 hours ago

கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை…

6 hours ago

ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்,…

6 hours ago

உ.பியில் கொடூரம்… தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!

Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி. உத்திர பிரதேசத்தில் தனது…

7 hours ago