கரூரில் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ‘தானியங்கி வேகமாணி கருவி’ மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கரூர் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்ல கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது.
அந்த குறிப்பிட்ட வேகத்தை மீறி அதி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறிய புதியதாக “தானியங்கி வேகமானி” எனும் கருவி மூலம் வாகன சோதனையில் கரூர் போக்குவரத்து
போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த தானியங்கி வேகமானி கருவி மூலமாக நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்கிய வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் வருகின்றனர்.
கரூர் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு அதிவேகமாக செல்லும் ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்து வருகின்றனர்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…