பிரபல மலையாள நடிகையும் ,கார்த்தியின் தம்பி படத்தில் நடித்த நிகிலா விமலின் தந்தை எம்ஆர் பவித்ரன் காலமானார்.
கடந்த 2009-ம் ஆண்டு “பாக்கியதேவதா” எனும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிகிலா விமல் . அதனையடுத்து பல மலையாள படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நிகில் தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஜோடியாக “வெற்றிவேல்” படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் . அதனையடுத்து கிடாரி,கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார் .அடுத்ததாக நிகிலா விமல் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியருடன் இணைந்து “தி பீரீஸ்ட்” படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவரது தந்தையான எம்ஆர் பவித்ரன் காலமாகியுள்ளார்.பரியராம் மருத்துவ கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிகிலாவின் தந்தை இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவரின் இறுதி சடங்கு இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.காலமான பவித்ரன் புள்ளிவிவர துறையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிபிஐ (எம்எல்)-ல் மாநில இணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…