கள்ளக்குறிச்சி; பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை!

பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்ட, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மாணவி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment