10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்தவகையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்.1 முதல் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் குறைந்து இருந்த கொரோனா, சற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மருத்துவத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இருப்பினும், பதற்றம் தேவையில்லை என்றும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டது. ஒருபக்கம் கொரோன பரவல் மீண்டும் தலைதூக்க, மறுபக்கம் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் உயரத் தொடங்கியிருக்கும் கொரோனா தொற்றால், பரவலாக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை அமைக்கலாமா? என்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…