ஐஎன்எக்ஸ் வழக்கு : செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை

ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு  பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அமர்வு விசாரித்தது. அதில்,ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.மேலும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது  உச்சநீதிமன்றம்.