தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் சமீபத்தில் திருச்சியில் உள்ள மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் நேற்றிரவு அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக உறவினர் குரு கணேஷுக்கு, செல்வராஜ் என்பவர் செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார்.
பின்னர் இதனை பார்த்து அதிர்ந்த குரு கணேஷ், அவசர அவசரமாக அந்த விடுதிக்கு சென்றார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வராஜ் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது செல்லம், நிகில் மற்றும் முகில் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த செல்வராஜை தகவலறிந்து வந்த போலீசார் மீட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு அறையை சோதனை செய்ததில் செல்வராஜ் எழுதிய கடிதம் கிடைத்தது.
இந்நிலையில், அந்த கடிதத்தில் மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. அதனை பார்த்த போலீசார், மனைவி, மகன்களை செல்வராஜ்தான் கழுத்தறுத்து இருப்பார் என்பதால் மூவர் உயிரிழப்பையும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…