விண்ணை பிளக்கும் இந்திய பேட்டிங் விமர்சனம் ..! அத பத்தி கவலைபட வேண்டாம் சீறும் ஜடேஜா..!

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் இந்தியா அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.இதில்  இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கடுமையாக எழுந்தது.

இதற்கு காரணம்  50 ரன்னில் 4 விக்கெட் 115 ரன்னிற்குள்  9 விக்கெட் என்று பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று  ஆடவில்லை அதன் பின்னர் ஜடேஜா – குல்தீப் ஜோடி சற்று நின்று ஆடியதனால் 179 ரன் எடுத்து 39.2 ஓவரில் அனைத்து        விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனிடையே இது குறித்து கேப்டன் கோலி தெரிவிக்கையில் முன் பேட்ஸ்மேன்கள் ஆடாத போது பின் பேட்ஸ்பேன்கள் ஆடுவது அவசியம் என்றார்.இருந்தாலும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது .

இந்நிலையில் களத்தில் நின்று விளையாடிய இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த விமர்சனத்திற்கு பதிலளித்து உள்ளார்.

ஒரு மோசமான ஆட்டத்தை வைத்து நமது வீரர்களின் திறமையை எடை போடக் கூடாது.இது ஒரு மோசமான ஆட்டமாக தான் அமைந்தது அதில் எதிர் கருத்து இல்லை.ஆனால் தவறுகளை திருத்தி கொள்ள நமக்கு கால அவகாசம் உள்ளது.பேட்டிங் திறமையை மேம்படுத்த கடுமையாக உழைப்போம்.இங்கு உள்ள நமது வீரர்களுக்கு எல்லாம் நல்ல அனுபவம் உள்ளது.

ஆடுகளம் தொடக்கத்தில் நன்றாக தான் இருந்தது.ஆனால் உலககோப்பை தொடரில் இது போன்ற அதிக புற்கள் கொண்ட ஆடுகளமாக இருக்காது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

kavitha

Recent Posts

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

5 mins ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

7 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

12 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

12 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

12 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

12 hours ago