விவசாயிகளை கொன்றது திமுக தான் – பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனிடம், நான் சொல்வதை எல்லாம் முதல்வர் பழனிசாமி செய்து வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டிக்கிறார் என்ற கேள்விக்கு, அப்போ அதிமுகவும், அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, அதற்கு முன், பின் வரக்கூடிய ஓரிரு நாட்களுக்குள் இதெல்லாம் முடியும் என்று சாத்தியப்படும் போது சொல்கிறது வேறு, நாங்கள் வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று கூறிக்கொண்டு வருவது வேறு என விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்யப்பட்டது என்றும் விவசாயிகள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது யாரு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைக்கு எல்லாரும் வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை கொன்றது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவிற்கு இருக்கும் மிக பெரிய பட்டப்பெயரே செய்யக்கூடிய ஊழல் வெளியே தெரியாத வகையில் விஞ்ஞான பூர்வமாக செய்வார்கள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொண்டுவர கூடிய திட்டங்கள் முன்கூட்டியே தெரியுது என்றால், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சசிகலா வருகை அந்த நாளில் எழுச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

14 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

17 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

18 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

45 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago