நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது – டிடிவி

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதுவரை செய்யப்படாமலிருப்பதற்கு டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும் திமுக அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன் என பதிவிட்டுள்ளார். 

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

19 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

31 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago