Categories: உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்..! காசாவில் மேலும் 40 பேர் பலி.. 100 பேர் காயம்..!

நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்தனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் காசாவில் இதுவரை 29,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய காசா பகுதியில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22 -ம் தேதியான நேற்று டெய்ர் அல்-பலாஹ் நகரில் பல வீடுகளில் இஸ்ரேல் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்ததாக பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அல்-அக்ஸா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிக்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த மருத்துவனை காயமடைந்த மக்களால் நிரம்பியுள்ளது.

 

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

22 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

33 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

36 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago