#IPL BREAKING: ராணா, ரஸல் அதிரடியால் பஞ்சாபை வீழ்த்திய KKR..!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs PBKS போட்டியில், கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் பொறுப்பாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். அவரையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சொற்ப ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது.

இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் முதலில் கொல்கத்தா அணியில களமிறங்கிய ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, குர்பாஸ் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின், கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கிய நிலையில், பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார்.

பின்னர் ராணா, ராகுல் சாஹர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, ரஸல் மற்றும் ரிங்கு சிங் களத்தில் நிற்க, 19 வது ஓவரில் ரஸல் 3 சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார். இறுதி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஸல் 19.5 வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க , கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டச்செய்தார்.

முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, நிதிஷ் ராணா 51 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 42 ரன்களும், ஜேசன் ராய் 38 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

3 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago