சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த மாதம் பிகில் பட விவகாரத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த விசாரணை முடிந்துள்ளது. இதில் நடிகர் விஜயின் சம்பள குறித்த விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, தற்போது நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…