இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். நேச்சர் டி.டி.எல் என்பது உலகின் முன்னணி ஆன்லைன் இயற்கை புகைப்பட ஆதாரமாகும், அது இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞரை தேர்வு செய்ய போட்டி ஒன்றை நடத்தியது.
இதன்மூலும் சுமார் 8,000 அதிகமான பலதரப்பட்ட புகைப்படங்கள் நேச்சர் டி.டி.எல் வளைதளப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றியாளர் யார் என்பதை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவருக்கு 1,500 டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் டி.டி.எல் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் புகைப்படம் வெற்றி பெற்றதாக நேச்சர் டி.டி.எல் அறிவித்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்படக் கலைஞர் விருதை விஜயன் தட்டிச்சென்றார்.
மேலும் விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர், இப்போது கனடாவில் குடியேறியுள்ளார், அவர் பரிசைப் பெற்ற பின்பு பேசுகையில் “நான் தண்ணீரில் இருந்த ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.தண்ணீர் ஒரு கண்ணாடியை உருவாக்கியது. பின்னர் நான் அதில் ஏறினேன் என்று கூறியுள்ளார்.
பின் அந்த மரத்தில் பல மணிநேரம் காத்திருந்து அந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் அதற்கு போர்னியோவில் ‘தி வேர்ல்ட் இஸ் கோயிங் அப்ஸைட் டவுன்’ என்ற தலைப்பு வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கே நேச்சர் டி.டி.எல் 1,500 டாலர் பரிசை வழங்கியுள்ளது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…