பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாட சென்ற சென்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் லாகூரில் கடாபி ஸ்டேடியம் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இலங்கை அணி வீரர்கள் 8 பேர் இறந்தனர் , 6 பேர் காயமடைந்தனர்.
அதன் பின்னர் பாதுகாப்பை கருதி மற்ற அணிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமீபத்தில் விளையாடியது. இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் நேற்று முன்தினம் கைப்பற்றியது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்மான் மானி கூறுகையில், “பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.
இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், எஹ்மான் மானி இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என கூறி உள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…