இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று உறுதி…!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது.

அதன்படி,கடந்த மாதம், நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர்,இந்திய வீரர்கள் 2 வார கால இடைவெளியில் இருந்தனர்.

இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இதனால்,அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர் இந்திய அணி வீரர்களுடன் டர்ஹாமிற்கு பயணம் செய்ய வாய்ப்பில்லை.எனினும்,கொரோனா பாதித்த வீரரின் பெயரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப்பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ட்வீட் செய்துள்ளனர்.

இதுகுறித்து,ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”விரைவில் குணமடையுங்கள் சகோதரர் ரிஷப்பந்த்.நீங்கள் விரைவாக மீள விரும்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து,ஹர்பஜன் கூறுகையில்:”விரைவில் நலம் பெறுங்கள் சாம்பியன்”,என்று பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டு அவர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மேலும்,இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்:”ஆம்,ஒரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவர் கடந்த எட்டு நாட்களாக தனிமையில் இருக்கிறார். அவர் அணியுடன் எந்த ஹோட்டலிலும் தங்கவில்லை, எனவே வேறு எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் வீரரின் பெயரை என்னால் வெளியிட முடியாது”,என்று தெரிவித்தார்.

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

39 mins ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

1 hour ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

1 hour ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

1 hour ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

2 hours ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

2 hours ago