பெங்களூருவில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் லசித் அம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 , தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சிஸை தொடங்கிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு 447 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயம் செய்தது.
447 ரன்கள் இலக்குடன் நேற்று 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழந்து 28 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் (16*), திமுத் கருணாரத்னா (10*) ஆகியோர் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக குசல் மெண்டிஸ் , திமுத் கருணாரத்னா இருவரும் விளையாட நிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்னா அரைசதம் அடித்து 54 ரன்னில் பண்ட் ஸ்டாம் அவுட் செய்தார்.
மற்றோரு வீரர் திமுத் கருணாரத்னா சிறப்பாக விலையாடி சதம் விளாசி 107 ரன்னில் பும்ராவிடம் போல்ட் ஆனார். அதில் 15 பவுண்டரி அடங்கும். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் சொற்ப ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக இலங்கை அணி 59.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்கள் எடுத்து 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 3 என மொத்தம் இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தினார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியை இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…