#INDvENG: கே.எல். ராகுல்-க்ருணால் பாண்டியா கூட்டணி அதிரடி.. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்கு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை இலக்காக வைத்தது, இந்திய அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார்கள். 28 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறியதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, மத்தியில் ஆடிவந்த தவான் சிறப்பாக ஆடி, சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 106 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அதனைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, கே.எல்.ராகுலுடன் க்ருணால் பாண்டியா இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். இருவரின் கூட்டணியில் ரன்கள் வேகமாக உயர, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்கள். இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

11 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

16 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

16 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago