இந்தியா எல்லா முனைகளிலும் திறமை மிக்க நாடாக உள்ளது என்று பிரதமர் மோடி தேசிய கேடட் கார்ப்ஸ் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் உள்ள காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர பிரதமரின் தேசிய கேடட் கார்ப்ஸ் (National Cadet Corps (NCC) கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, கொரோனா வைரஸ் மற்றும் எல்லைகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்பதை கடந்த ஆண்டு இந்தியா காட்டியுள்ளது.
கொரோனாக்கு எதிரான “மேட் இன் இந்தியா” தடுப்பூசிகளை தயாரிப்பதை குறிப்பிடுகையில், இந்தியா அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக உள்ளது. தடுப்பூசி பாதுகாப்பை கொண்டிருந்தாலும், இந்தியாவிற்கு சவால் விடுபவர்களின் நவீன ஏவுகணை அழித்தாலும், நாடு எல்லா முனைகளிலும் திறமை மிக்க உள்ளது. இந்தியா, சீனாவுடன் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது.
தடுப்பூசியில் இந்தியா ‘aatmanirbhar’ என்றால், அது தனது ஆயுதப் படைகளை நவீன மயமாக்குவதற்கும் சம வீரியத்துடன் முயற்சி செய்து வருகிறது. நமது நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாட்டில் சிறந்த போர் இயந்திரங்கள் உள்ளன.
ரஃபேல் விமானங்கள் இந்தியா வரும்போது நடுவழியில் எரிபொருள் நிரப்பப்பட்டதை குறிப்பிடுகையில், சவுதி, கிரேக்க நாடுகள் உதவின. இது வளைகுடா நாடுகளுடனான நமது வளர்ந்து வரும் உறவை காட்டுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் செய்து வருகிறோம். விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளராக விரைவில் அறியப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…