கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது.
நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8-ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
மேலும், இந்த சோதனையின்போது 2 பெட்டி நிறைய உள்ள ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், 3 இடங்களுக்கு சீல் வைத்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…