தலைநகரில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை – காவல் துறை தகவல்

கடந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில்  1,699 கற்பழிப்பு சம்பவங்கள், 2,186 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 65 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வழக்குகள் 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி, 2,168 கற்பழிப்புகள், 2,921 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 109 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் கற்பழிப்பு வழக்குகளில் 1.77 சதவீதம் அந்நியர்கள் குற்றவாளிகள் என்றும் இது 2019-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாக இருந்தது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.குற்றவாளிகளில் 44 சதவீதம் பேர் குடும்பம் அல்லது குடும்ப நண்பர்கள் என்றும் 26 % பிற அறியப்பட்ட நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக,டெல்லி காவல்துறையினர் கடந்த ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2,66,070 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 3,16,261 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டை விட 15 சதவீதம் குறைவு ஆகும்.ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை, ஒவ்வொரு 19 மணி நேரத்திற்கும் ஒரு கொலை மற்றும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொலை வழக்குகள் 9.40 சதவீதம் குறைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் இதுபோன்ற 472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2019 -ஆம் ஆண்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் வழக்குகள் 26.67 சதவீதமும், கொள்ளை வழக்குகள் 27.33 சதவீதமும், மோட்டார் வாகன திருட்டு வழக்குகள் 24.23 சதவீதமும், பிற திருட்டு வழக்குகள் 30.52 சதவீதமும் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 0.35 சதவீதம் ஓரளவு உயர்ந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் 1,956 ஆக இருந்த நிலையில், 2020 -ஆம் ஆண்டு மொத்தம் 1,963 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago