ஐஎஃப்எஸ் ரூ.4,380 கோடியும்.. ஆருத்ரா ரூ.2,125 கோடியும் மோசடி – பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி

அதிக வட்டி தருவதாக கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது என பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அறிவுறுத்தல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன், வேலூர் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ரூ.4,380 கோடி மோசடி செய்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரூ.4,380 கோடி மோசடி என்பது தற்போது சுமார் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

இதுபோன்று ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் ஒரு பகுதியை வட்டியாக தந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. 93,000 வாடிக்கையாளர்களிடம் ஆருத்ரா கோல்டுக்கு நிறுவனம் முதலீடு பெற்றுள்ளது. நிதி மோசடி செய்துள்ள ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

திருச்சி எல்பின் நிறுவனம் சுமார் ரூ.6,000 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறினார். 7,000 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் நிறுவனங்கள் சொத்து வாங்கி குவித்துள்ளது. அவற்றை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடிகளில் பல நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக 2 பேர் கைது என்றும் எல்பின் நிறுவனம் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், வங்கிகள் 5.5 சதவீத வட்டிதான் டெபாசிட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12% வட்டிதான் வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எண்ணென்றும் கூறினார்.

அதிக வட்டி தருவதாக சொல்லும் திட்டங்கள் மோசடி திட்டங்கள். விழிப்புடன் இருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது. 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக மக்களிடம் ஆசைவார்த்தை கூறி வருகின்றனர் எனவும் அறிவுறுத்தினார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

3 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

15 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

52 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

54 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago