ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது .

அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது குறித்து சில விஷயங்களை கூறியதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பான் இந்தியா நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்ற ஆசை துளி கூட கிடையாது. நான் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்களும், மற்ற திரைப்படங்களும் நாடு முழுவதும் ரசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

எனக்கு இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நான் ஒருபோதும் இந்தியில் நடிக்க மாட்டேன். எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது. அதனால் இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை”. என கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

1 hour ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

2 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

2 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

2 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

2 hours ago