அத செலவு பண்ணிட்டேன் திருப்பி தர முடியாது…! அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்…!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் ரஞ்சித் தாஸ் என்பவர், தனது வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.5.5 லட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் ரஞ்சித் தாஸ் என்பவர், பாட்னா கிராம வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அந்த வங்கியின் சார்பாக மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட ரூ.5.5 லட்சம் தவறுதலாக ரஞ்சித் தாஸின் வங்கி கணக்குக்கு சென்றுவிட்டது.

இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த கிராமவாசி தனக்கு மோடி தான் இந்த 5 லட்சத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டுள்ளதாக எண்ணி அதை எடுத்து ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் ரஞ்சித்துக்கு ரூ.5.5 லட்சத்தை திருப்பி அனுப்புமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணத்தை செலவழித்து விட்டதாகவும், பிரதமர்  பிரதமர் அனைவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று சொல்லி இருந்தபடி, தனக்கு முதல் தவணையாக ரூ.5.5 லட்சம் போட்டதாக எண்ணி செலவு செய்து விட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை, அதனால் திருப்பித் தர இயலாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை திருப்பி வழங்க வங்கி கணக்கில் எதுவும் பாக்கி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி, கடந்த  2013ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பேசும்போது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும்  ரூ.15 லட்சம் போடுவதாக கூறியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

14 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago