இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார்.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி லடாக் சென்று, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு, உரையாற்றினார்.
அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அந்த உரை, இந்தியளவில் பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழில் வெளியான கட்டுரையை மேற்காட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார்.
அந்த பதிவில், திருக்குறள் மிகவும் ஊக்கமளிக்கிறதாகவும், இது பணக்கார எண்ணங்கள், உன்னத இலட்சியங்கள் மற்றும் சிறந்த உந்துதல் ஆகியவற்றின் பொக்கிஷம் எனவும், மரியாதைக்குரிய திருவள்ளுவரின் வார்த்தைகள் நம்பிக்கையையும் பிரகாசத்தையும் பரப்பும் சக்தியைக் கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிகமான இளைஞர்கள் திருக்குறளை படிப்பார்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழிலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என தெரிவித்த அவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறதாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்தார்.
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…