இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என ஓபிஎஸ் ட்வீட். 

இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனமகிழ்ச்சி அளிக்கிறது. இசைஞானி அவர்கள் எனது சொந்த மாவட்டமான தேனியைச் சார்ந்தவர் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment