கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன்.இவரது மனைவி அமலா ஆவார்.இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது.
மேலும் ராஜன் அடிக்கடி அமலாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் குழந்தை வெள்ளையாக இருப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது.வெகு நேரம் ஆகியும் குழந்தை அழுகை நிற்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள்,அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டிற்குள் ராஜனையும் காணவில்லை.அமலா வீட்டில் படுத்திருந்துள்ளார்.அவரை அக்கம்பக்கத்தினர் எழுப்பியுள்ளனர்.ஆனால் அவர் எழுந்திராமல் இருந்துள்ளார்.
பின்பு அவர் இறந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை தலைவாணியை வைத்து அமுக்கி யாரோ கொலை செய்ததை உறுதி செய்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் அவரது கணவர் ராஜன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு குழந்தை வெள்ளையாக இருந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…