கோடை காலத்தில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு ஐஸ்கட்டிகள் மிகவும் உதவுகிறது. ஐஸ்கட்டிகள் எப்படி சருமத்தைப் பாதுகாக்க உதவும் என பலருக்கும் கேள்விகள் எழலாம். ஆனால் கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பல வழிகளில் உதவுகிறது. அவற்றை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைப்பதற்கு ஐஸ் கியூப் உதவுகிறது. இதற்கு நாம் ஒரு சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு முகத்தில் லேசாக ஒத்தடம் கொடுக்கும் பொழுது முகத்தில் உள்ள உஷ்ணங்கள் குறைந்து சருமத்தை அழகுடன் பாதுகாக்கிறது.
கோடைக்காலம் என்றாலே பலருக்கும் பருக்கள் சொல்லாமலே வந்துவிடும். இதற்கு ஒரு துண்டில் ஐஸ்கட்டிகளைப் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவி வர முகத்தில் உள்ள ரத்த நாளங்கள் கட்டுப்படுத்தப்பட்டு முகப்பருக்கள் முற்றிலும் குறைய வழிவகுக்கிறது.
நமது புருவங்களை கோடைகாலங்களில் சரி செய்யும் பொழுது லேசான சிறு காயங்கள் இருந்தாலும், அதிக அளவிலான எரிச்சல்களை ஏற்படுத்தும். இந்த எரிச்சலைப் போக்குவதற்கு ஐஸ் க்யூப்ஸ் புருவங்களுக்கு மேலாக மென்மையாக தேய்த்து வரும்பொழுது, நமது சருமத்தில் உள்ள வலியை குறைக்க உதவுவதுடன் இந்த வலியின் காரணமாக ஏற்படக்கூடிய அழற்சிகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.
அதிகப்படியான வெயில் காரணமாக கோடை காலங்களில் நமது தோல் சொரசொரப்பாகவும் கருமை நிறமாக மாறிவிடும். இந்த நேரத்தில் நமது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பொழுது மீண்டும் சருமம் பொலிவாக இயற்கை நிறத்துடன் காட்சியளிக்கும். இதற்கு நாம் ஐஸ்கட்டிகளை வைத்து உடலில் மசாஜ் கொடுக்கும் பொழுது நல்ல பலன் பெற முடியும்.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…