Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தம்மை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு விளம்பரங்களை பார்த்து வெவ்வேறு கிரீம்களை முகத்தில் தடவி பார்ப்பதும். சில கிரீம்கள் அந்த முகப்பொலிவை கொடுத்தாலும், அதிக விலை கொடுத்து தொடர்ந்து வாங்க முடியாத சூழலும்நிலவி வருகிறது.
அதனை தவிர்த்து, வீட்டுலலேயே முகப்பொலிவு பெறுவதற்கு இயற்கையாக கிரீம் தயார் செய்யலாம். அதனை எப்படி தயார் செய்வது என்பதை இந்த செய்தி குறிப்பில் நாம் காணலாம்.
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாளை ஜெல் – 2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
காய்ச்சிய பால் – 1 ஸ்பூன்.
பாதாம் எண்ணெய் அல்லது [தேங்காய் எண்ணெய்] – 1/2 ஸ்பூன்.
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதனுடன் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அரை ஸ்பூன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும் . நன்கு கலக்கும் பொழுது ஒரு கிரீம் பதத்திற்கு நமக்கு கிடைக்கும்.
இந்த கிரீமை நாம் இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் மாற்றம் ஏற்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது முகம் பளபளப்பு கூடும் முகப்பொலிவு ஏற்படும். கருமை நிறம் மாறும். இந்த கிரீமை ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…