முதலில் கடலை பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பின் ஊறிய பருப்பு நன்கு குலைய வேக வைத்து நீரை வடிகட்ட வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் அலுத்து பிசைய வேண்டும். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கி, அரைத்தது போல் வரவேண்டும்.
அதன் பின் இதனுடன் வெல்லத்தை போட்டு நன்கு தட்ட வேண்டும். பிறகு துருவிய தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுத்து, இதனுடன் சேர்க்க வேண்டும். பின் இதனுடன் ஏலக்காய், வறுத்த முந்திரி, பொரித்த கிஸ்மிஸ் எடுத்து பூரணத்தோடு சேர்த்து பிசைய வேண்டும்.
முதலில் அரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, அதில் இரண்டு கப் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறிவிட வேண்டும். பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்ய வேண்டும்.
அதன்பின் எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம் போல் செய்ய வேண்டும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்க வேண்டும்.
பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூட வேண்டும். பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் அடுக்கி, பானையில் வைத்து வேகவிட வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கொழுக்கட்டை வெந்த உடன் எடுத்து விடலாம். இப்பொது சுவையான இனிப்பு மோதகம் தயார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…