நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க -உயர் நீதிமன்றம் உத்தரவு..!

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில்  பெண் மருத்துவர்  ஒருவருக்கு 90% ஊனம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு இழப்பீடு தொகையாக 18 லட்சத்தில் இருந்து 1 கோடியே 49 லட்சமாக உயர்த்தி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும், அந்த வழக்கில் எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் எனவும் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை வேண்டும் எனவும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே அந்த வேக கட்டுப்பாடு கருவி பொறுத்த வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சாலைகளின் மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கபட்டதாக மத்திய அரசு விளக்கம்  கொடுத்தது.

இதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த 100 கிலோமீட்டர் செல்லலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்தது. மேலும் வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டருக்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

murugan

Recent Posts

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

19 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

36 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

50 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

56 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

3 hours ago