மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் இயங்கவில்லை என்றும் அவர்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, 10% மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் தான் பேருந்துகள் கொள்முதல் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், இது மாற்றுத்திறனிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுவதகவும், மோசமான சாலைகளை முழுமையாக மேம்படுத்திய உடன் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டப்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவின் படியும் மற்ற பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் ஒரு பேருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கு ரூ.58 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டும் தற்போது கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும், இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் வாதமாக முன்வைத்த பிறகு, இந்திய ஆட்சியாளர்கள் ஏழைகளாக இருக்கிறார்களா? என்றும் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகள் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ஆணைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் வாங்க வேண்டும்.
அதுவரை தமிழகத்தில் மாற்றுத்திறனிகளுக்கான வசதியின்றி புதிய பேருந்துகளை வாங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…