சல்மான்கான் மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் மும்பை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கும் உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் மும்பையில் உள்ள காவல்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார். தங்களுடைய உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு தனது சொந்த நிறுவனமான ஃப்ரெஷ் நிறுவனம் மூலம் தயாரித்த ஒரு லட்சம் சானிடைசர்களை கொடுத்து உதவியுள்ளார்.தற்போது சல்மான் கானின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சல்மான் கான் பாலிவுட்டில் பணிபுரியும் 5 லட்சம் உறுப்பினர்களில் 25 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் ரூ. 3, 000 வீதம் செலுத்தி உதவியதோடு, மும்பையில் உள்ள 25ஆயிரம் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…