5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக பெருகுவார்கள் என்று அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வா.உ.சி. சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பர் 2012 – 2013 ஆண்டில் தனக்கு வழங்கப் பட்ட நல்லாசிரியர் விருதினை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்து உள்ளார். விருதினை திருப்பி ஒப்படைக்க அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் ஆட்சியர் மலர்விழியிடம் தனது நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைத்தார்.ஆனால் விருதினை வாங்க மருத்த ஆட்சியரோ ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியரின் .
கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.இது குறித்து ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் ஒரு வாரத்திற்குள் தனது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை ஆனால் எனக்கு வழங்கிய விருதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைப்பேன் என்று கூறிய உள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…