இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி  17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89  ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய டார்கெட்டுடன் களமிறங்கிய டெல்லி 8.5  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

குஜராத் அணி படு தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” டெல்லிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி மோசமாக விளையாடியதாக நான் நினைக்கிறேன். பேட்டிங் செய்ய வந்தபோது தொடர்ச்சியாக விக்கெட் இழந்தது பார்க்கவே மோசமாக இருந்தது.

குஜராத் அணியில் ரஷீத் கான் ஒரு அளவுக்கு ரன்கள் அடித்துக்கொடுத்தார். சாய் சுதர்ஷன் தேவையில்லாமல் அவுட் ஆனார் என்று தான் நான் சொல்வேன். கொஞ்சம் பந்தை கவனித்து ஓடி இருந்தால் நிச்சியமாக ரன்-அவுட் ஆகி இருக்க மாட்டார். இப்படியான குறைவான ரன்கள் வந்ததுக்கு முக்கிய காரணமே குஜராத் அணி தொடர்ச்சியாக விக்கெட்டை கொடுத்தது தான்.

விக்கெட் கொடுக்காமல் ஒரு அளவுக்கு தொடர்ச்சியாக தட்டி தட்டி விளையாடி இருந்தால் கூட நல்ல ரன்கள் கிடைத்து இருக்கும். ஒரு சுமாரான டார்கெட்டை டெல்லி அணிக்கு எதிராக வைத்து இருக்கலாம். ஆனால், குஜராத் அணி அதனை செய்யவில்லை. டெல்லி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வெற்றிபெற்றது” எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா ”  ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இப்போது இருக்கிறார். அவர் அங்கு இருந்தும் மும்பை இன்னும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட  அவர் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணியை இந்த சீசனில் நிச்சயம் பாதிக்கிறது”  என்றும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியை ஹர்திக் பாண்டியா தான் வழிநடத்தி வந்தார். பிறகு இந்த சீசனில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

4 mins ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

1 hour ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

1 hour ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

1 hour ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

2 hours ago