சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும் – ஆளூர் ஷாநவாஸ்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் ட்வீட். 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என பேட்டி  அளித்திருந்தார். இதுகுறித்து, ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment