#BREAKING: நவ.15க்குள் 4,038 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறையில் நவம்பர் 15-க்குள் புதிதாக 4,038 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். தற்கொலைக்கு அதிக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்து கடைகளில் தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment