தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 3 ஆம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழத்தில் 47 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள நகைக்கடைகளில் முதல் கட்டமாக கிருமி நாசினி தெளித்து வர்த்தகத்தை தொடங்கினர். அங்கு மாதச் சீட்டுக்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். இதுகுறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கூறுகையில், குறைவான ஊழியர்களை அமர்த்தியுள்ளோம் என்றும் முகக்கவசம் , சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நகைக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம் என்றும் ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டது. இதனால் எங்கள் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். பின்னர் எங்கள் தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…