தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டெல்லியில் நேற்று நடைப்பெற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, டெல்லியில் நேற்று வழங்கப்பட்டன. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்துக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மதிப்பிற்குரிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…