கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை.
ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தின் ரல்லாகுவாவில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் ராவ் என்ற பைலட்டை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், லாவண்யாவின் மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்பட்டார். கணவரின் துன்புறுத்தலை தாங்க இயலாமல், லாவண்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இவரது குடும்பத்தினர் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டனர்.
அந்த காட்சியில், வெங்கடேஸ்வர ராவ், லாவண்யாவை மீண்டும் மீண்டும் தாக்குகிறார். இதனை பார்த்த அவர்களது செல்ல நாய் அதனை தடுக்க முயற்சி செய்கிறது. வெங்கடேஸ்வர் ராவ் அவளை அடிப்பதை நிறுத்திய பிறகு, காயமடைந்த லாவண்யா எழுந்து வலியால், வயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறார்.
இதனை தொடர்ந்து லாவண்யா தனது இல்லத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…