சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17- வது சீசனின் 30- வது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சிக்ஸர் மழைகளை பறக்க விட்டார்.

அவர் ஆடிய அந்த ஆக்ரோஷ ஆட்டத்தால் வெறும் 39 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய கிளாசன்னும் பெங்களூரு அணியை 31 பந்துக்கு 67 ரன்ஸ் எடுத்து பொலந்து கட்டினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் விளாச இறுதியில், ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழந்து 20 ஓவருக்கு 287 ரன்கள் எடுத்தது.

இதனால் 288 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய கோலி 42 ரன்களுககும், சிறப்பாக விளையாடிய டுப்ளஸி 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து இறுதி வரை தினேஷ் கார்த்திக் மட்டும் தனியாக போராடி 83 ரன்கள் எடுத்து வெற்றியின் முனை வரை கொண்டு சென்றார். இதனால், பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணங்களை சுட்டி காட்டி பேசி இருந்தார். அவர் பேசுகையில். “நான் இது போன்ற போட்டிகளில் கேப்டன் ஆக இருக்க மிகவும் விரும்புகிறேன். மும்பைக்கு எதிராக போட்டியில் கூட எங்களுக்கு இதே போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. இனி அதற்கு பிறகு நடக்காது என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் நாங்களே இங்கு இருக்கிறோம். ஒரு பந்து வீச்சாளராக நாங்கள் முடிந்ததை செய்தோம்.

நீங்கள் சரளமாக ஏழு அல்லது எட்டு ரன்களை விட்டுக்கொடுக்கும் ஒரு சாதாரண ஓவர் கூட இது போன்ற போட்டியை அது பாதிக்கலாம். மேலும், இப்போது எல்லாம் விளையாட போகும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று கணிக்கும் முயற்சியை நான் நிறுத்திவிட்டேன். எனது அணியினர், பிட்ச் எப்படி இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடுகிறார்கள். இதுவரை இந்த தொடரில் நான்கு வெற்றிகளைப் பெற்றுள்ளோம் உண்மையில் எனது அணியின் வீரர்கள் போட்டியில் செயல்படுத்தும் சுதந்திரம் தான் இதற்கான முக்கிய காரணம்.

அவர்கள் தொடர்ந்து சுதந்திரத்துடன் விளையாடுவதை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஒரு அணியின் அனைத்து வீரர்களும் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.

அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

4 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

34 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

38 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

60 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago