டேவிட் ஜான்சன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன் இன்று தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இறந்து கிடந்ததாக உள்ளூர் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால், இவர் கொத்தனூர் கனக ஸ்ரீ லே அவுட்டில் உள்ள வீட்டில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இது குறித்தது அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைகளையும் நடத்தி வருகின்றன. டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவர் ஆவார். கடந்த 1996 ம் ஆண்டில் இந்தியாவுக்காக, ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியிலும் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
1995-96 ரஞ்சி டிராபி சீசனில் அவரது சிறப்பான சாதனை ஒன்று தான், கேரளாவுக்கு எதிராக 152 ரன்கள் விட்டு கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணம் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா அவரது எஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். அவர், “நமது முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சனின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என பதிவிட்டிருந்தார். மேலும், இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கம்பிரும் இரங்கலை தனது X தளத்தில் தெரிய்வித்திருந்தார். அவர், “டேவிட் ஜான்சனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் கடவுள் பலம் தரட்டும்” என பதிவிட்டு இரங்கலை தெரிவித்து இருந்தார்.
மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை…
விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த…
ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க…
தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில்…
பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது…
Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக…