நாக்பூரில் ஐசியூவில் உள்ள மனைவியுடன் சண்டையிட்டு, பிறந்த குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீசிய கணவர் கைது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஐசியூவில் இருந்த தனது மனைவியுடன் சண்டையிட்டு, புதிதாகப் பிறந்த மகனை மருத்துவமனை தரையில் தூக்கி வீசியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமராவதியைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர் 2020-இல் திருமணம் செய்ததிலிருந்து தனது மனைவியை சந்தேக படுகிறார் என்றும் டிசம்பர் 30 அன்று அவர் தனது மகனைப் பெற்ற பிறகு அவரைப் பார்க்க மருத்துவமனை வந்தபோது தகராறு செய்துள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அவர் குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார். இதன்பின் சம்பவம் நடந்த வார்டு 46-இல் 32 வயதுடைய நபர் செவிலியர்கள் மற்றும் பிறரால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர்கள் காவல்துறையை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, கொலை செய்ய முயன்றதற்காகவும், தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காகவும் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…