மாநில அரசின் அலட்சியத்தால் சேதன் செளகான் இறந்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மற்றோரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செளகானுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேதன் செளகான், உத்தர பிரதேச அரசின் அலட்சியத்தால் தான் இறந்தார் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேதன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தரமில்லாத சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அலட்சியத்தால் மட்டுமே சேதன் சவுகான் இறந்ததால், உத்ரபிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறும், யு.பி. சேதன் சவுகானின் மரண வழக்கில் யு.பியின் கல்வி அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் இயக்குனர் பி.ஜி.ஐ.எம். ஆகியோர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று லக்னோ காவல் ஆணையருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…